;
Athirady Tamil News

ஆழிப்பேரலையின் நினைவாக அராலியில் நாளை இரத்ததான முகாம்!!

0

ஆழிப்பேரலையின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அராலி தெற்கு சைவத்தமிழர் இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(25.12.2022) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெறும்.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், குருதிக் கொடையாளர்கள் ‎0707227330 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.