;
Athirady Tamil News

இரசாயன உர இறக்குமதி தடை தளர்த்தப்பட்டது; வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!!

0

இரசாயன உர இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையை நீக்கி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் க்ளைபொசேட், யூரியா, பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட், அமொனியா, சல்பேட் போன்ற இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இரசாயன உரங்கள் திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.