வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் பலி!!
கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை நீடிக்கும் நிலையில், பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.