;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா மீட்பு!!

0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அதை அவதானித்ததையடுத்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர், பயன்படுத்தப்படாத அந்த தோட்டாவை, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்

இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.