;
Athirady Tamil News

படகு விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்!!

0

முல்லைத்தீவு – கொக்களாய், முகத்துவாரம் பகுதியில் இன்று காலை கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக படகு ஒன்றினை செலுத்தும் போது படகு விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தின் போது காயமடைந்த மற்றைய மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.