;
Athirady Tamil News

38 வருட கால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!!! (படங்கள்)

0

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த விஜித குணரட்ண, தனது 38 வருட கால பொலிஸ் சேவையினை இன்றைய தினத்துடன் நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார்.

அதனை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள், யாழ் பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி, ஏனைய மத தலைவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கியதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு , மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நினைவு பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது,

நிகழ்வில் யாழ்,காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.