;
Athirady Tamil News

தொலைபேசி அழைப்பில் 2 கோடி ரூபா மோசடி – தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் !!

0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொலைபேசி நிறுவனம் ஒன்றிற்கு சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிறுவனத்தின் முகாமையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.

குறித்த அழைப்பால் 53,983 அமெரிக்க டொலரை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.