;
Athirady Tamil News

சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை: ரெலோ!!

0

இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிக் சொல்ஹெய்ம் நாட்டின் பிரதிநிதியோ அல்லது இராஜதந்திரியோ அல்ல எனவும் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சினையை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் எரிக் சொல்ஹெய்ம் தன்னுடைய உத்தியோகபூர்வமான பணி எதுவோ அதனைச் செவ்வனே செய்யட்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர்​ சுரேந்திரன் குருசுவாமி தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.