;
Athirady Tamil News

சுவர்ணமஹால் பினேன்சியஸின் உரிமம் ரத்து!

0

“சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி” இன் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (2022-12-28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், “சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி” நிறுவனத்திற்கு நிதி வணிக நடவடிக்கைகளை நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நாணய வர்த்தகச் சட்டத்தின் 37(3) பிரிவின்படி இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, “சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி” நிறுவனத்திற்கு 2022 டிசம்பர் 28 ஆம் திகதி முதல் நிதி வணிகச் சட்டத்தின் விதிகளின் கீழ் நிதி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.