;
Athirady Tamil News

சாவகச்சேரியில் வீடுடைத்து திருட முற்பட்ட குற்றத்தில் ஒருவர் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!!

0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடுடைத்து திருட முற்பட்ட திருடனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம், வீட்டின் கதவினை இன்றைய தினம் புதன்கிழமை உடைத்து திருட முற்பட்ட வேளை சத்தம் கேட்டு அயலவர்கள் கூடி திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்து மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபரை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.