;
Athirady Tamil News

நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி!!

0

அரசியலமைப்புப் பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரம், தீர்மானமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக, சபாநாயகர் தலைமையில் நேற்றைய தினம் (29) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதிலும், எவ்வித உடன்பாடுமின்றி அந்தக் கூட்டம் நிறைவுபெற்றது.

அரசியலமைப்பு சபைக்கான மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசியலமைப்புப் பேரவைக்க நியமிக்கப்பட வேண்டிய சிவில் உறுப்பினர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இது இந்தத் தேசத்துக்குச் செய்யப்படும் பாரிய துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.