;
Athirady Tamil News

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !!

0

பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1997-ம் ஆண்டு 10 வகுப்பு படித்த மாணவர்கள், 25 வருடங்கள் நிறைவடைந்ததை தனித்து வத்துடன் கொண்டாடினர். 40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.

இதில் முன்னாள் மாணவர்கள் கந்தநாதன் , ரங்கநாதன், நித்தியானந்தம், சிவமுருகன், கிரிதரன் , சீனுவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளிக் குழும தலைவர் இருதயமேரி ஆசியுரையாற்றினார். தாளாளர் ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.