;
Athirady Tamil News

அனுமதியின்றி நள்ளிரவு காட்சிகளை வெளியிட்ட விவகாரம்- திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் !!

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின. இந்நிலையில் 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து 11ம் தேதியன்று நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு திரைப்படங்களை திரையிட்டுள்ளதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாட்டின் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.