;
Athirady Tamil News

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

0

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நாம் ஒற்றுமையாக முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். மேலும், நாட்டின் சுதந்திரம் “அமிர்த மஹோத்சவ்”ன் போது கொண்டாடப்படுவது இந்த முறை சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.