;
Athirady Tamil News

கடவுச்சீட்டு குறித்து பிரிட்டன் விடுத்த எச்சரிக்கை – ஒரு வார காலமே அவகாசம்!

0

பிரித்தானியா வாழ் மக்களுக்கு கடவுசீட்டு தொடர்பாக ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, தமது கடவுசீட்டை புதிப்பிப்பதற்கான கட்டணங்கள் உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதுப்பித்தலை நிகழ் நிலையில் (online) மேற்கொள்வதற்கான கட்டணமாக 75.50 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகள் உயர உள்ளது.

சிறுவர்களுக்கான கடவுசீட்டு கட்டணம் 49 பவுண்டுகளிலிருந்து 53.50 பவுண்டுகளாக அதிகரிக்க உள்ளது.

மேலும் தபால் நிலையம் மூலமாக புதிய கடவுசீட்டை பெறுவதற்கான விண்ணப்பக்கட்டணமக பெரியவர்களுக்கு 85 பவுண்டுகளிலிருந்து 93 பவுண்டுகளாகவும், சிறுவர்களுக்கு 58.50 பவுண்டுகளிலிருந்து 64 பவுண்டுகளாகவும் உயர இருக்கிறது.

குறித்த கடவுசீட்டு புதுப்பித்தல் முதலான விடயங்களுக்கான கட்டணங்கள் பெப்ரவரி 2ஆம் திகதி சுமார் 9 சதவிகிதம் உயர இருப்பதால், தற்போதைய கட்டணத்தில் கடவுசீட்டை புதுப்பிக்க இன்னமும் ஒரு வாரமே உள்ளது.

ஆகவே, தங்கள் கடவுசீட்டுகளை புதுப்பிக்கவேண்டிய பிரித்தானியர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.