;
Athirady Tamil News

அமெரிக்க ரொக்கெட் ஏவுதளம் மூலம் உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல் – போர்க்குற்றம் என ரஷ்யா குற்றச்சாட்டு! !

0

உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க உக்ரைன் பல கோணங்களில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்தநிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலை மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைனின் குறித்த தாக்குதலானது மிகப்பெரிய போர்க்குற்றம் என ரஷ்யா தனது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உக்ரைனின் குறித்த தாக்குதலின் மூலம் 14 பேர் கொல்லப்பட்டதோடு 24 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதலானது அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் ரொக்கெட் ஏவுதளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், குறித்த மருத்துவமனைத் தாக்குதல் உக்ரைன் அரசின் கடுமையான போர்க்குற்றம் எனவும், இதற்கான பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் ரஷ்யா தனது குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.