;
Athirady Tamil News

அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து- 7 பேர் பலி!!

0

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிலர் மினி லாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் சஜ்பூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற மினி லாரி மீது மற்றொரு லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இன்று காலை பனி மூட்டம் அதிகம் இருந்ததால் எதிரில் வந்த வாகனங்கள் தெரியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.