;
Athirady Tamil News

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை !!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமாக இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.