;
Athirady Tamil News

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் பாணில் விலையை 10 ரூபாயினால் குறைக்கத் தீர்மானம்!!

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை்(ஏப்ரல் 7) வெள்ளிக்கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

“நாளை காலையில் முதல் 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் அதிரடியாக பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் கோதுமை மா, எண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.