;
Athirady Tamil News

பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்- மின்சிக்கனத்துக்காக அதிரடி நடவடிக்கை!!

0

பஞ்சாப் மாநிலத்தில் கோடையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மே 2-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் மின் நுகர்வு மதியம் 1.30 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசு அலுவலங்களை மதியம் 2 மணிக்கு மூடினால், மின் நுகர்வு அதிகரிப்பதை 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும்.

இதுகுறித்து அரசு ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பஞ்சாப் அரசு அலுவலகங்கள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இந்த பணி நேரத்தை மே 2-ந் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூலை 15-ந் தேதி வரை அமலில் இருக்கும். அரசு அலுவலகங்களில் செய்யப்படும் இந்த பணி நேர மாற்றத்தால், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பை குறைக்க முடியும். நானும் எனது அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.