;
Athirady Tamil News

இந்திய மயக்க மருந்துகள் உடனடியாக மீளப்பெறப்பட்டன !!

0

இலங்கையில் சத்திர சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது.

இதன்படி, மூன்று வகை மருந்துகளின் பயன்பாடு தற்காலிகமாக மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த மருந்து இந்திய கடன் வரியின் கீழ், இந்திய மருந்து நிறுவனத்தால் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கைக்குள் மருந்தின் தரத்தை பரிசோதிக்க முடியாது என்ற உண்மையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மற்ற நாடுகளில் அதன் செயல்திறன் மற்றும் இந்தியா வழங்கிய தொடர்புடைய சான்றிதழ்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.