;
Athirady Tamil News

ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரின் பங்குதாரர்கள் 2 பேர் சிக்கினர்!!

0

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பாரதிநகரில் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டை கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். வீட்டை ரூ.3 கோடிக்கு வாங்க சுதர்சன் முடிவு செய்தார். அதன்படி முன் பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார். இதன் பின்னர் சுதர்சன் அந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டார். இந்நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியை புதிய வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார். வீட்டில் பணம் இருக்கும் விஷயம் சுதர்சன் பங்குதாரர்களான கோபி அடுத்த களஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26), கோபி அடுத்த கேடாரை பகுதியை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதர்சன் புதிய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் சுதர்சன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, வடிவேல்குமார், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செ ல்வம் ஆகிய கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற கார் புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. அதில் 2 பேர் சென்றதும் பதிவாகி இருந்தது.

இதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களான ஸ்ரீதர் மற்றும் பிரவீன் என்ன தெரிய வந்தது. இதில் ஸ்ரீதர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களாக ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் இருந்துள்ளனர். இதில் ஸ்ரீதர் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் சுதர்சனன் வீட்டில் ரூ.2.80 கோடி பணம் இருப்பது ஸ்ரீதருக்கும், பிரவீனுக்கும் தெரிந்து உள்ளது. பணத்தைத் திருட 2 பேரும் திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி சம்பவத்தன்று வெள்ள நிற காரில் வந்து வீட்டுக்குள் இருந்த ரூ.2.80 கோடி பணத்தை 4 பேக்குகளில் வைத்து திருடி சென்றுள்ளனர். முதலில் சுதர்சனத்துடன் ஸ்ரீதரும் புகார் கொடுக்க வந்திருந்தார்.

அவரது நடவடிக்கையில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. அவரிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தினோம். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். பின்னர் உரிய முறையில் விசாரித்தபோது 2 பேரும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். முதலில் வெள்ளை காரில் பணத்தை திருடி அவர்கள் பின்னர் சிறிது தூரம் சென்றதும் அந்த காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் சென்று உள்ளனர். அந்த காரில் தான் பணத்தை வைத்திருந்தனர். நாங்கள் அந்த காரில் இருந்த பணத்தை மீட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதனையடுத்து மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் மட்டுமின்றி போலீஸ் நிலைய சுற்று வட்டார பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் பணம் திருடப்பட்ட அதற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.