;
Athirady Tamil News

அமெரிக்கா செல்கிறார் ஷெஹான் !!

0

உலக வங்கிக் குழும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்த கால கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசியில் இன்று (10) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் தனது பிரதிநிதித்துவம் குறித்து அமைச்சர், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பமாகும் வசந்த கால கூட்டங்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் பொருளாதார மீட்சியை நோக்கி நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வங்கிக் குழும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்த கால கூட்டங்களுடன் ஜி20 கூட்டங்களும் இடம்பெறவுள்ள நிலையில், மத்திய வங்கியாளர்கள், நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.