;
Athirady Tamil News

புற்றுநோயிலிருந்து குணமடைந்த மகளை அழைத்துச் சென்றபோது தாய்க்கு அடித்த அதிஷ்டம் !!

0

புற்றுநோயிலிருந்து மகள் குணமடைந்த நிலையில்அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் லொட்டரி டிக்கெட் எடுத்த தாயாருக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் அதிஷ்டம் அடித்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லேக்லாண்டைச் சேர்ந்த ஜெரால்டின் கிம்ப்லெட் தனது மகளின் புற்றுநோயைக் குணப்படுத்த தனது சேமிப்பை முழுவதுமாகச் செலவழித்துள்ளார்.

ஜிம்ப்லெட் தனது மகளுக்கு கடைசிச் சிகிச்சை அளித்துவிட்டு, ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியபோது, ​​ஜெரால்டின் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

ஜெரால்டின் வாங்கிய லொட்டரிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு கிடைத்துள்ளது.இந்தச் செய்தி குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

மேலும் சமூக வலைதளப் பயனாளர் ஒருவர் குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அனைத்து பெற்றோர்களும் இதுபோன்ற லொட்டரி பரிசுகளுக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். .

You might also like

Leave A Reply

Your email address will not be published.