;
Athirady Tamil News

என்பிஏ கூடைப்பந்தாட்டதில் பிரபல வீரர் மைக்கல் ஜோடன் அணிந்து ஆடிய காலணி ரூ.18 கோடிக்கு ஏலம்!!

0

அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்தாட்டதில் பிரபல வீரர் மைக்கல் ஜோடன் அணிந்து ஆடிய காலணி ரூ.18 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை பெற்றுள்ளது. பொதுவாக என்பிஏ கூடைப்பந்தாட்டதில் ஆடுவோரின் ஷுக்கள் பிரபல நிறுவனங்கள் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம் அந்த வகையில் 1998ல் நடைபெற்ற என்பிஏ கூடைப் பந்தாட்டதில் இரண்டாவது இறுதி போட்டியில் ஜோடன் அணிந்து ஆடிய ரெட் காலணி இதுவரை இல்லாத அளவாக சுமார் ரூ.18 கோடிக்கு ஏலம் விடப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது.

சோத்பியின் நிறுவனம் ஆன்லைன் வாயிலாக இந்த ஏல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உட்டா ஜாஸ் மாகாணத்தில் உள்ள சால்கிளிக் சிட்டியில் நடைபெற்ற அந்த இரண்டாவது இறுதி போட்டியில் ஜாஸ் அணிக்கு எதிராக புல்ஸ் அணியின் மைக்கல் ஜோடன் 37 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு வித்திட்டார். அத்தொடரில் புல்ஸ் அணியே சாம்பியன் கோப்பையை வென்றது. ஜோடன் 6 வது முறையாக எம்பிபி பட்டத்தை கைப்பற்றினார். அந்த போட்டி ரசிகர்களின் நினைவில் இருந்து ஒரு போதும் நீங்காது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.