;
Athirady Tamil News

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் பரிசு: விவசாயி அறிவிப்பு!!

0

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து வீட்டு வசதிதுறை மந்திரி வி.சோமண்ணா போட்டியிடுகிறார். வருணா தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. அவர்கள் வருணா தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் தருவதாக வருணா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறிவித்துள்ளார். அதில், வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் சித்தராமையாவை தோற்கடித்தால் தனது விவசாய நிலத்தை விற்று ரூ.50 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.