;
Athirady Tamil News

2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வருகிறார்!!

0

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 25-ந்தேதி கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 24-ந்தேதி மாபெரும் பேரணியை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. ஆனால் இதில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் பேரணியில் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.