;
Athirady Tamil News

ஆந்திர மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!!

0

அமெரிக்காவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அமெரிக்காவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்த பெட்ரோல் நிலையத்திற்கு கொள்ளை கும்பல் ஒன்று வந்துள்ளது. இந்த கும்பலை சாயிஷ் வீரா தடுக்க முயன்றபோது, அந்த கும்பல் சுட்டுக்கொன்றது. உயிரிழந்த சாயிஷ் வீரா இன்னும் 2 வாரங்களில் பட்டம் பெற்று நாடு திரும்ப இருந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரை சுட்டுக்கொன்ற 2 பேர் படத்தை வெளியிட்டு போலீசார் தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.