;
Athirady Tamil News

வரும் காலம் நம் காலம்… ஜி.கே.வாசன் நம்பிக்கை!!

0

தமிழகத்தில் த.மா.கா. என்றால் இருக்கு… ஆனா இல்லை… என்ற கதையில் இருக்கிறது. தேர்தல் வெற்றி என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்கள் ஏக்கத்தோடு சென்று விட்டார்கள். எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற ரீதியில் இருக்கிறார்கள். இதை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேசுக்கு நடந்த மணிவிழாவில் ஜி.கே.வாசன் பேசும் போது, ‘அரசியலை பொறுத்தவரை எந்த தலைவர்களிடமும் ஆதாயம் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னோடு பலர் பயணிக்கிறார்கள். அந்த நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.