;
Athirady Tamil News

உதயநிதி ஒரு ‘அவசர அமைச்சர்’- டி.டி.வி. தினகரன்!!

0

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார். இதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தி.மு.க.வின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தி.மு.க.வினர் அம்மா அவர்களை வீழ்த்த பல்வேறு யுத்திகளை எடுத்து செயல்பட்டபோதிலும், அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கள் மன்றத்தின் முன் தீயசக்திகளால் அவரை வெல்லமுடியவில்லை.

அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை தி.மு.கவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும். இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர். ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.