;
Athirady Tamil News

உறங்கிக்கொண்டு இருந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் !!

0

மொரகஹஹேன – நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ கமாண்டோ சிப்பாய் ஒருவரும் அவரது சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் தாக்க பயன்படுத்திய வாள் மற்றும் இரும்புக் கம்பி என்ப பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.