;
Athirady Tamil News

கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!

0

இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) இரவு 08.00 மணி வரை நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கோட்டை மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்களுக்கும் நீர் விநியோகம் தடைச் செய்யப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.