;
Athirady Tamil News

புதிய பாராளுமன்றத்தில் என் வாழ்நாளில் அமர்வேன் என்று நினைக்கவில்லை: தேவகவுடா!!

0

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 1962-ம் ஆண்டு நான் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தேன். 1991-ம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தேன்.

அப்போது, பிரதமர் ஆவேன் என்றோ, இத்தனை காலம் பொது வாழ்க்கையில் நீடிப்பேன் என்றோ நினைத்ததே இல்லை. இன்னும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், என் வாழ்நாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமர்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை. 91 வயதில் அதை சாதித்துள்ளேன். இந்திய ஜனநாயக வரலாற்றின் மாபெரும் தருணத்தை பார்த்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.