;
Athirady Tamil News

சீனா வந்தவுடன் QR நீக்கப்படும்!!

0

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நடத்தப்படும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும், இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.