;
Athirady Tamil News

சீன போர் விமானங்கள் அத்துமீறி தைவான் எல்லைக்குள் நுழைவு – அதிகரித்த பதற்றம்!

0

ஆறு மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.

இதனை, தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தைவானை தனது பிரதேசமாக சீனா உரிமை கோரி வருவதுடன், அவசியம் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை கைப்பற்றுவோம் என எச்சரித்து வருகிறது.

அண்மைய காலங்களில், தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் வான்வழி ஊடுருவல்களை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், மொத்தம் 37 சீன இராணுவ விமானங்கள் தைவானின் தென்மேற்கு பகுதிக்குள் நுழைந்து, நீண்ட தூர உளவுப் பயிற்சிக்காக மேற்கு பசிபிக் நோக்கி சென்றதாக தைவான் அமைச்சு தெரிவித்துள்ளது.

தைவானின் இராணுவம் நிலைமையை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக கூறியுள்ளது.

அதேசமயத்தில், தைவானின் பாதுகாப்பு மண்டலத்தில் சீனாவின் அதிகரித்த ஆய்வு, தீவை அழுத்தத்தில் வைத்திருக்கும் தந்திரங்களின் ஒரு பகுதியாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவை தென் சீனக் கடலில் தங்கள் முதல் கூட்டு கடலோர காவல்படை பயிற்சிகளை முடித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த ஊடுருவல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.