;
Athirady Tamil News

துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி கைது!!

0

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான குறித்த பெண், சந்தேக நபரான பொலிஸ் சர்ஜன்ட் இன் உறவினர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த யுவதி தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த பொலிஸை கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.