;
Athirady Tamil News

5 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 80 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20-ந்தேதி பாதிப்பு 36 ஆக இருந்தது. அதன் பின்னர் 5 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் 50-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 62 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 441 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,655 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 15 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.