;
Athirady Tamil News

இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது: தரையிறங்கியதும் நட்டாவிடம் மோடி கேட்ட கேள்வி!!

0

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். கடந்த 20-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். அவரை பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லெகி ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஜே.பி. நட்டா உடன் ஹர்ஷ் வர்தன், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், கவுதம் காம்பீர் ஆகிய எம்.பி.க்களும் சென்றிருந்தனர். அவர் தரையிறங்கியதும் பா.ஜனதா தலைவர் நட்டாவிடம், ”இங்கே (இந்தியா) என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டார். அப்போது, கடந்த 9 ஆண்டுகளில் நம் அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து கொண்டிருக்கிறோம். நாடு சந்தோசமாக இருக்கிறது என நட்டா தெரிவித்தார்” என பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்தார். பிரதமர் தங்களிடம் என்ன கேட்டார் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு மனோஜ் திவாரி இவ்வாறு பதில் அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.