;
Athirady Tamil News

புற்றுநோய்க்கு தடுப்பூசி விரைவில் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல் !!

0

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாமென அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்று நோய் மையம், புற்று நோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தடுப்பூசிக்கான ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய திருப்பு முனையை எட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில், சியாட்டில் புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான டொக்டர் ஜேம்ஸ் குல்லி தெரிவிக்கையில்,

“புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும்.

பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு பிறகு, தடுப்பூசி சிகிச்சையை உருவாக்கும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம். இவை நோயைத் தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகள் அல்ல.

மாறாக புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும், புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க உதவும் தடுப்பூசிகளாக இருக்கும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.