;
Athirady Tamil News

பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத காதல்: 63 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து கொள்ளும் ஜோடி!!

0

பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத காதலின் எதிரொலியாக, 63 ஆண்டுகளுக்கு பின் திருமணமான ஜோடி ஒன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் சம்பவம் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தாமஸ் மெக்மீகின் (78) என்பவரும், நான்சி கேம்பெல் (77) என்பவரும், கடந்த 63 ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் படித்தனர். இருவருக்குள்ளும் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டதால், அன்பாக பழகி வந்தனர். மாணவ பருவத்தில் இருந்த அவர்களின் நட்பு ஒருகட்டத்தில் காதலாக மாறியது. பள்ளி காலங்கள் முடிந்ததும் இருவருக்கும் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தது. இருவரும் பிரிந்திருந்தாலும் கூட, சில நேரங்களில் இருவரும் ஒன்றாக வாக்கிங் செல்வார்கள்; அவ்வப்போது பார்ட்டிக்கும் செல்வார்கள்.

ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணங்களால் தாமஸ் மெக்மீகினுக்கு வேறொரு ெபண்ணுடனும், நான்சி கேம்பெலுக்கு வேறொரு ஆணுடனும் திருமணம் நடந்தது. பல ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கடந்த 2012ம் ஆண்டு அவர்கள் படித்த பள்ளியின் 50வது ஆண்டு விழா என்பதால், அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். தங்களின் கடந்த கால காதல் தருணங்களை பகிர்ந்து கொண்டாலும் கூட, அவர்களுக்குள் இடைவெளி இருந்தது. பள்ளி நிகழ்ச்சிகள் முடிந்த உடன் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஆனால் கடந்தாண்டின் இறுதியில், அவர்கள் இருவரும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது இருவரும் மனம் விட்டு பேசினர். இன்றைய நிலையில் நான்சி கேம்பெல்லின் கணவர் இறந்துவிட்டார். அதேபோல் தாமஸ் மெக்மீகினின் மனைவியும் காலமாகிவிட்டார். அதனால் இருவரும் மறுதிருமணம் செய்து கொள்ளலாமா? என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். இவர்களது முடிவை, அவர்களின் குழந்தைகளிடம் தெரிவித்தனர். அதற்கு இருவரது குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் கடந்த வாரம் தம்பா விமான நிலையத்தில் இருவரது குடும்ப உறுப்பினர்களும், பள்ளிப் பருவ காதல் ஜோடிகளும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்குமான திருமணம் உறுதி செய்யப்பட்டது.

காதலன் தாமஸ் மெக்மீகின், தனது நான்சி கேம்பெலுக்கு மோதிரம் அணிவித்தார். விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாமஸ் மெக்மீகின் கூறுகையில், ‘பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு நான்சி கேம்பெல் மீது ‘க்ரஷ்’ உண்டு. அவள் மிகவும் அழகான, அன்பான இதயம் கொண்ட பெண். கல்லூரி காலங்களில் இருவரும் ‘டேட்டிங்’கில் இருந்தோம். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்தோம். அதிர்ஷ்டவசமாக மீண்டும் சந்தித்துள்ளோம். என் வாழ்நாள் முழுவதையும் நான்சியுடன் கழிக்க விரும்புகிறேன்’ என்று உணர்ச்சி மிகுந்த காதல் வாழ்க்கையை கூறினார். அதேபோல் நான்சியும் தனது கடந்த கால காதல் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட காதல், தற்போது இந்த ஜோடிக்கு நிறைவேறியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.