;
Athirady Tamil News

சீனாவில் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: மழலைகளுக்கு விஷம் வைத்த பாதகி!!

0

மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம் மார்ச் மாதம், உடன் பணி செய்யும் ஒரு ஆசிரியருடன் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பிறகு சோடியம் நைட்ரைட் எனும் ரசாயனத்தை வாங்கியுள்ளார். மறுநாள் அவர் பணிபுரிந்த மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வைக்கப்பட்ட பாத்திரங்களில் அதனை கலந்து விட்டார்.

அதன்பின்னர் ஜனவரி 2020 மாதவாக்கில் ஒரு குழந்தைக்கு பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் பலியானது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. விசாரணையில், ஆசிரியை வாங், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த ஹெனன் மாகாணத்தின் ஜியாவ்ஜுவோ நகர நீதிமன்றம் கடந்த 2020 ஜனவரி மாதம் அந்த ஆசிரியைக்கு மரண தண்டனை வழங்கியது. மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று, அதே நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நிறைவேற்ற அவர் அடையாளத்தை உறுதி செய்தது.

பின்பு அவர் தண்டனைக்கான மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சமீப காலமாக சீனாவின் மழலையர் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறை மரணங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த தீர்ப்பை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர். வருடாவருடம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு சீனா மரண தண்டனை வழங்கி வருவதாக மனித உரிமைகளுக்கான என்.ஜி.ஓ. அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.