;
Athirady Tamil News

தெலுங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எட்டு பேரின் உடல் மீட்பு!!

0

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முலுகு மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசித்து வந்த 12 பேர் நேற்று பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் உயிர் தப்பினர். காணாமல் போன 8 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே, ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் எட்டு பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.