;
Athirady Tamil News

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு -பலர் பலி வாகனங்கள்,ஆயுத கிடங்குகள் தாக்கி அழிப்பு !!

0

உக்ரைன் படையினர் கடந்த நாள் (14) முழுவதும் தெற்கு உக்ரைனில் உள்ள டவ்ரியா போர்முனையில் நடத்திய தாக்குதலில் 99 ரஷ்ய வீரர்களைக் கொன்று 190 பேரை காயமடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டவ்ரியா செயல்பாட்டு மற்றும் மூலோபாயக் குழுவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஒலெக்சாண்டர் டர்னாவ்ஸ்கி, இதனைத் தெரிவித்தார்.

“கடந்த நாள் முழுவதும் எமது இராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகள் 1,620 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கடந்த நாளில், எதிரிப் படைகள் மொத்தம் 301 வீரர்களை இழந்தன. (99 பேர் கொல்லப்பட்டனர், 190 பேர் காயமடைந்தனர், 12 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்).

ஓகஸ்ட் 14 அன்று நடைபெற்ற மோதலில் உக்ரைனியப் படைகள் 34 ரஷ்ய இராணுவ உபகரணங்களை அழித்துள்ளன. இதில் ஐந்து டாங்கிகள், எட்டு கவச பணியாளர் வாகனங்கள், ஐந்து பீரங்கி அமைப்புகள் மற்றும் மோட்டார்கள், இரண்டு பல்-குழல் ரொக்கெட் அமைப்புகள், ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு, இரண்டு UAV கள், எட்டு வாகனங்கள் மற்றும் மூன்று சிறப்பு உபகரணங்கள் அடங்கும்.

அத்துடன் உக்ரைனியப் படைகள் மூன்று ரஷ்ய வெடிமருந்து சேமிப்பு கிடங்குகளையும் அழித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.