;
Athirady Tamil News

ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!!

0

2022/2023 ஆண்டுக்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருமாறு ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தகைமைகள், நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2021 இல் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இல. 2255/24 இல் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ விண்ணப்பங்கள், உரிய ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளுடன், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் ஓகஸ்ட் 25, 2023 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ஆலோசகர்களின் நியமனம் – 2022/2023” என கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் தெளிவாக எழுதப்பட வேண்டுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை www.presidentsoffice.gov.lk என்ற இணையத்தளத்தின் மூவம் பதிவிறக்கம் செய்யமுடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.