;
Athirady Tamil News

புவி வெப்பமயமாதலை கணிக்க செயற்கைகோள் தொழில்நுட்பங்களை கையாளும் நாசாவின் புதிய திட்டம் !!

0

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொக்கெட் லேப் உடன் இணைந்து புவி வெப்பமயமாதல் குறித்தான ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வகையில், உலகின் பனிக்கட்டி கண்டங்களான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்ப இழப்பு குறித்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அதன் மேம்பட்ட நடவடிக்கையாக துருவ பிரதேசங்கள் மேல் செயற்கைகோள்கள் ஏவி துல்லிய கணிப்புகளை பெறவுள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இருந்து புவி எந்த அளவு தனது வெப்பத்தை இழக்கிறது என்பதற்கான புரிதலுக்கு இந்த ஆய்வு நடவடிக்கை உதவ இருக்கிறது.

இதற்காக 2 கியூப்சாட் வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் கடல் பனி இழப்பு, பனிக்கட்டி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை குறித்து தெளிவான கணிப்புகளும், காலநிலை மாற்றம் குறித்தும் அறிய உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.