;
Athirady Tamil News

பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த ரெயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு!!

0

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து வண்டி எண் 11301 உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.45 மணி அளவில் பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையத்திற்கு பிளாட்பாரம் நம்பர் மூன்றில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கி இருந்த நிலையில் காலை 7.10 மணி அளவில் திடீரென பி-1 மற்றும் பி-2 ஆகிய இரண்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வரத் தொடங்கியது. உடனடியாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் 20 நிமிடத்தில் வந்து ரெயில் பெட்டியில் இருந்து வந்த புகையை அணைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.