;
Athirady Tamil News

எலான் மஸ்க் நிறுவனத்தின் 75 ஆயிரம் ஊழியர்களின் தகவல்கள் கசிந்ததால் பரபரப்பு!!

0

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 75,735 ஊழியர்கள் மற்றும் முன்னாள் வேலை பார்த்தவர்கள் விவரங்கள் வெளியில் கசிந்துள்ளதாக வெளிநாட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. அவர்கள் பார்த்து வரும் வேலை மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் வெளியில் தெரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 2 ஊழியர்கள் மூலம் இந்த ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிறுவனத்தின் ரகசிய தகவல்களை கசிய விட்டது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.