;
Athirady Tamil News

4 மாதங்கள் சாப்பிடவில்லை என்றால்…! மகாராஷ்டிரா மந்திரி பேச்சு!!

0

தொடர்ச்சியாக பண்டிகைகள் வரும் நிலையில், வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக நிர்ணயித்து, வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வெங்காயம் குறித்து மகாராஷ்டிரா மாநில மந்திரி தாதா புசே கூறியதாவது:- 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை நீங்கள் பயன்படுத்தும்போது, சில்லறை விற்பனையை காட்டிலும், 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யும்போது, அதை உங்களால் வாங்க முடியும்.

வெங்காயம் வாங்க முடியாதவர்கள், இரண்டு முதல் நான்கு மாதங்கள் அதை சாப்பிடாமல் இருந்தால், எந்த வித்தியாசமும் ஏற்பட போவதில்லை. ஏற்றுமதி வரி அமல்படுத்தும்போது, சரியான ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும். சில நேரங்களில் குவிண்டால் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆலோசனை மூலம் இதற்கு சமூக தீர்வு காண முடியும்.

இவ்வாறு தாதா புசே தெரிவித்தார். முன்னதாக, நாசிக்கில் வெங்காய வியாபாரிகள் சங்கம், ஏலத்தில் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வெங்காயம் உற்பத்தில் நாசிக் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.