;
Athirady Tamil News

அமெரிக்க விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டி பெட்டியை பறித்ததாக பணியாளர் மீது புகார்!!

0

அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில், இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும், எனது மருமகனும் ஐபாடில் கேம் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது விமான பணிப்பெண் எனது மருமகனின் சிற்றுண்டி பெட்டியை எங்களை கேட்காமலேயே எடுத்து சென்று விட்டார்.

இதனால் நான் கோபமாக இருக்கிறேன். இதுகுறித்து அந்த விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் செய்ய உள்ளேன் என கூறியிருந்தார். மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் இருந்த சிற்றுண்டி பெட்டியில் தானியங்கள் மற்றும் வேர்க்கடலை, வெண்ணை, ஜாம் சாண்ட்விச் போன்ற திண்பண்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவரது இந்த பதிவை தொடர்ந்து விமான பணிப்பெண் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.