;
Athirady Tamil News

ரஷ்யாவின் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்!

0

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் இதில் தங்களது விமானமொன்றும் சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது.

இவ்வாறு சேதமடைந்துள்ள டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நகரங்களை தாக்கி அழிப்பதற்காக ரஷ்யா இவ்வகை விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது.

இந்த ஆளில்லா விமான தாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. குறித்த பிராந்தியத்திலேயே டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன.

ஆளில்லா விமானமொன்றை அவதானித்த வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் அதன் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ஒரு விமானம் சேதமடைந்துள்ளபோதும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.